Sunday, October 21, 2007

வல்லினம் இதழ் - 2

சாதி ரீதியான பிரதிநிதிதுவம் பத்திரிகைகளில் வேண்டும்

- த. பழமலய்.

"சனங்களின் கதை" கவிதைத் தொகுதி மூலம் தமிழ்க்கவிதைக்கு அறிமுகமானவர் கவிஞர் த.பழமலய். "குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்", "இவர்கள் வாழ்ந்தது", இதுவரை எட்டுத்தொகுதிகளைக் கொண்டுவந்துள்ளார். சாதிகளின் போராட்ட வரலாற்றைத் தமிழ்ப் பாட்டாளிகளின் உணர்வைப் பேச்சுத் தமிழில் கவிதையாகப் படைத்தவர்.

தமிழகத்தில் இனவரைவியல் இலக்கியத்தின் முன்னோடிகளின் ஒருவராகக் கருதப்படும் த. பழமலய், இலக்கியத்திலும், சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளிலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு வேண்டும் என்று அவ்வப்போது குரலெழுப்பி வருகிறார். அவருடனான இந்த நேர்காணல் அவரது எழுத்துக்களைப் பல்வேறு பின்புலங்களில் விளங்கிக்கொள்ள உதவும். இனி வல்லினத்திற்காக அவர் அளித்த நேர்காணலில் இருந்து. . . .


தலித்துகளுக்காகப் பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்பதாக ரவிக்குமார் பேசி வருகிறார். தலித்துகளுக்காக மற்றவர்கள் பணிபுரிந்ததை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?

. . . அவங்களுக்குத் தங்களுடைய ஆட்களை ஒருங்கினக்கிணைக்கனும். "ஒரே தலைவர்தான் தங்களுக்கு உண்டு" அப்படின்னு சொல்லனும். இப்போ உண்டாகியிருக்கிற மத்த சாதித் தலைவர்களை நமக்குத் தலைமதாங்க விடாதே; பிரியாதே; நாம் எல்லோரும் ஒரே அணியில் நிக்கனும். அதுக்கு வேண்டியது, தலைவரை ஒருத்தராக்கனும். நமக்கு வேண்டிய சிந்தனையாளரை ஒருத்தராக்கனும். அது பெரியாராகவும் இருக்கக்கூடாது. பெரியாரா இருந்தா இங்க நாலுபேர் பிரிஞ்சுடுவான். அப்போ, அம்பேத்கரை உயர்த்தி, பெரியாரைக் கீழிரக்கினாத்தான் எதிர்பார்த்த வேலை நடக்கும். சமகாலத்தில் ஓர் அரசியல் கட்டுமானத்தை உருவாக்க இதுபோன்ற உக்திகள் தேவை. இதெல்லாம் எவ்வளவு தூரம் வெற்றி பெரும் என்பது வேறு விஷயம். பின்னே இதெல்லாம் எதுக்கு? அப்போவாவது நம்ம ஜனங்களுக்கு விழிப்புணர்வு வருதான்னு பாப்பமே. "தண்ணீர ஊத்தி எழுப்ப முடியல. வெந்நீரை ஊத்தியாவது எழுப்ப முடியுமா"ன்னு பாக்கலாமே. அப்படித்தான் ரவிக்குமார் நெனக்கிறார்னு நான் நெனக்கிறேன்.
அம்பேத்கரைத் தலித்துகளுக்காக மட்டுமே பேசுபவராகக் குறுக்குவதென்பது அம்பேத்கருக்கும் பெருமையில்லை; தலித்துகளுக்கும் பெருமையில்லை.

இது, தலித் அல்லாத தலித் ஆதரவாளர்களை ஓரம்கட்டும் அரசியல்தானே?

தலித் ஆதரவாளர்கள் என்றால் யார்? தலித்துகளுக்காக ஒரு கட்டத்தில் அவங்க பிரச்சினைகளுக்காக வக்கீலா நின்னு வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள்தானே? இப்போது, தலித்துகள் அவங்க பிரச்சனையை அவங்களாகவே பேசிக்கொள்வார்கள் என்றால் சந்தோஷம். ஆனா, அந்த நிலைக்கு அவங்க வந்துட்டாங்களா என்பது அவங்களே தீர்மானிச்சிக்க வேண்டிய விஷயம்.

சாதிய அரசியல் தாக்கம் மிகுந்திருக்கும் இன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

சாதிய அரசியல் தாக்கம் மிகுந்திருக்கும் இன்றைய சூழலில், சாதிய இலக்கியங்களின் (தலித், விளிம்புநிலை) எழுச்சி தவிர்க்க முடியாதது. சாதிய விழிப்புணர்வை உண்டாக்கி, சாதிகளுக்கிடையிலான சமத்துவத்தையும் நிறுவி, நிலைநாட்டுவதாக தமிழ் இலக்கியத்தின் போக்கு இருக்கும். இதை இன்னொரு வகையில் சொல்வதானால் அனைத்துச் சாதிகளின் இருப்பை அங்கரிப்பதாகவும் சமூக நீதியை வழங்குவதாகவும் இருக்கும். இது நம் இலக்கியக்காரர்கள் மறந்துவிட்ட, ஆனால் மறக்கக்கூடாத நமது ஐந்திணை மரபே ஆகும். (மேலும் படிக்க. . . காண்க வல்லினம் இதழ் 2; ஆகஸ்ட் - அக்டோபர் 2002)

*********0*********


பெரியார் சிந்தனையாளர் இல்லையென்றால் பின் யார்தான் சிந்தனையாளர்?

- அ. மார்க்ஸ்

பெரியாரைச் சிந்தனையாளர் இல்லை என்கிறார் ரவிக்குமார். பின் யார்தான் சிந்தனையாளர். Academicஆக, விஞ்ஞனப் பூர்வமான ஆநவாடினடிடடிபலயைப் பயன்படுத்தி ஆய்வு செய்பவர்கள்தான் சிந்தனையாளர்களா? எழுதுகிறவர்கள்தான் சிந்தனையாளர்களா, பேசுகிறவர்கள் சிந்தனை யாளர்கள் இல்லையா? விஞ்ஞானப்பூர்வமான ஆநவாடினடிடடிபல என்பதெல்லாம் அதிகாரம் கலக்காத தூய ஊடகமா? சாக்ரடீஸ் எதையும் எழுதிவைக்கவில்லை என்பதால் அவர் சிந்தனையாளரில்லையா? சிந்தனையாளர்கள் பற்றி கிராம்ஷி சொன்ன ஒரு கருத்தாக்கம் முக்கியமானது. அறிவு ஜீவிகள் பற்றி அவர் சொல்ல வரும்போது, பாரம்பரிய அறிவு ஜீவுகள் (Traditional Intelectual) உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள் (Organic Intetectual) என்றும் பிரிப்பார். பாரம்பரிய அறிவுஜீவிகள் இருக்கிற நிலைக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள். உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள் என்பவன் "ஸ்டேடஸ்கோ"விற்கு எதிராக இருப்பவன். இந்த உயிர்ப்புமிகு அறிவுஜீவிகளிடம்கூட ஏதும் பலவீனங்கள் இருந்தால் பின்னாளில் அவனையும் உள்வாங்கும். ஆனால் பெரியார் என்றென்றைக்கும் "ஸ்டேடஸ்கோ"விற்கு எதிராக நின்ற எதிர்க் கலாச்சாரவாதி, மாற்றுச் சிந்தனையாளர். அதனால்தான் நாம் இன்றைக்கு துணிச்சலோடு சொல்லமுடியும், "இந்துத்துவமும், பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கையில் எடுக்க முடியாத ஒரு நெருப்புத் துண்டமாக விளங்கக் கூடியவர் பெரியார் ஒருவர்தான்.

(மேலும் படிக்க. . . காண்க வல்லினம் இதழ் 2; ஆகஸ்ட் - அக்டோபர் 2002)


வல்லினம் இரண்டாம் இதழில் . . . .


கட்டுரைகள்:

1. தலித் தொன்மங்களுக்கு அப்பால் - பக்தவத்சல பாரதி
2. தமிழ் சினிமாவும் அதன் பார்வையாளர்களும்-1 - அ. ராமசாமி
3. பேசுவது போல எழுதுவது என்பது - கே. பழனிவேலு

கவிதை:

வெண்ணிலா, அய்யப்ப பணிக்கர், உடுக்கை, ஆ. அமிர்தராஜ்

சிறுகதை:

கிணறு - மனோஜ் தாஸ், தமிழில்: ராஜ்ஜா , கரசேவை - ப்ரதிபா ஜெயச்சந்திரன்

No comments: