Sunday, October 21, 2007

வல்லினம் இதழ் - 1

கேப்மாரிகள் - இரு பதிவுகள்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்கும் பல்வேறு சமூகப் பிரிவினர் குற்றப் பரம்பரையினராக முத்திரைக்குத்தப்பட்டிருந்தனர். தீவிரக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் கடுமையான அடக்குமுறையும் இம்மக்கள்மீது செலுத்தப்பட்டன. சில பகுதிகளில் ஆதிக்க உயர்சாதியினரால் திருட்டு போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பல பழங்குடியின சாதிகளும் அடங்கும். தமிழகத்திலும்கூட பல இடைநிலைச் சாதிகள் குற்றப் பரம்பரையினராக நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. வடமாவட்டங்களில் இதனை எதிர்த்துப் போராட் டங்களும் அவற்றின் அடிப்படையில் அரசியல் மாற்றங்களும்கூட நிகழ்ந்துள்ளன.

இன்றைக்கும் குற்றப்பழி சுமக்கும் பிரிவினராக உள்ளவர்கள்தான் இந்தக் கேப்மாரிகள். புதுச்சேரி அருகேயுள்ள கூனிச்சம்பட்டு என்ற கிராமத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் வசிக்கும் மக்கள் வெளியூர்களுக்குச் சென்றால் தங்கள் ஊரின் பெயரைச் சொல்ல மாட்டார்களாம். கூனிச்சம்பட்டு என்று சொன்னாலே கேப்மாரிகள் என்று கருதி கைது செய்துவிடுவர்களாம். இப்படி சொல்லமுடியாத வேதனையுடன் வாழ்ந்துவரும் இம்மக்கள் பற்றிய பதிவு இது.

பதிவு - 1

கேப்மாரிங்கிறது திருடங்களோட சாதி. திருட்டு அவங்களோட முக்கியமான தொழில். இந்த சாதி பொம்பளைங்க பெரிய ஊருங்களுக்கு. . .தில்லி, பம்பாய், சென்னை, மாயவரம், கும்பகோணம் போவாங்க. உள்ளூர்ல திருடமாட்டாங்க. ஆம்பளைங்க பேங்க்ல திருடுவாங்க. அவங்க பல பாஷ பேசுவாங்க. அப்புறம். . . செயின், நெக்லஸ், வளையல்னு போட்டுகிட்டு போவாங்க. ஆனா, பணக்காரங்க மாதிரி இருக்கமாட்டாங்க.

காரணியோட நடுவுல இருந்து கொஞ்சம் தள்ளி கேப்மாரிகளுக்கு ஒரு தெரு இருக்கு. அவங்களுக்கு என்று சொந்தமாக நெலமெல்லாம் இருக்கு. நாங்கள் அவங்க நெலத்துல வேலை பாத்திருக்கோம். அந்தச் சாதிப் பொம்பளைங்க மாட்டுக்கறில்லாம் சாப்பிடமாட்டாங்க. திருடப்போறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவங்க குலதெய்வம் காக்கப்பட்டனுக்கு பூசை போடுவாங்க. ஆத்துக்குப் பக்கத்துல இருக்குற காக்கப்பட்டன் கோயில் ரொம்ப அமைதியா இருக்கும். வேற இந்த சத்தத்தையும் கேட்க முடியாது. காக்கப்பட்டன் சாமியே பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும். இந்தக் கோயில்ல வூட்டுக்காரு, கொழந்தைங்களோட மூணு பகல் பொழுது, மூணு ராப்பொழுதும் தங்கியிருப்பாங்க. திருடப் போறதுக்கு முன்னாடி காக்கப்பட்டனின் உத்தரவுக்காகக் காத்திருக்கிற அந்த நேரத்துல ஒரு நாளைக்கு மூணுமொற அந்த ஆத்துலயே குளிப்பாங்க. காக்கப்பட்டன் உத்தரவு கிடைச்சப்பிறகு திருடப்போவாங்க. காக்கப்பட்டன் உத்தரவுக்காக ஒரு மாசம்கூட காத்திருப்பாங்க.

அவங்க பெரும்பாலும் பெரிய கோயில்ல நடக்கிற திருவிழாவுக்குப் போவாங்க. யாரும் அவங்கள சந்தேகப்படமாட்டாங்க. அதுக்கு அவங்க போட்டிருக்கிற நகைங்கதான் காரணம். அவங்க வச்சிருக்கிற ஒரு மருந்தால, கூட்டத்துல இருக்குறவங்க கழுத்து, கையில எல்லாம் பீச்சி அடிப்பாங்க. உடனே, செயின், வளையல்களெல்லாம் கத்திரிச்சு எடுத்துக்குவாங்க. யாரும் இதக்கண்டிபிடிக்க முடியாது. கண்ணமூடி தெறக்கறதுக்குள்ள செஞ்சிடுவாங்க. அவங்களுக்கு அவங்களோட தொழில்பத்தின நுணுக்கம் தெரியும். நகைங்களை திருடன ஒடனே அங்கிருந்து போயிடமாட்டங்க. யார்கிட்டே திருடப்போறாங்களோ, அவங்களச் சுத்தி இவங்களோட ஆளுங்க சுத்திகிட்டே இருப்பாங்க. சின்ன சந்துல நிக்கிற அவங்களோட ஒரு ஆள்கிட்ட இந்த நகைங்கலெல்லாம் போய் சேர்ந்திடும். பதினைஞ்சு-இருபதாயிரம் மதிப்புக்கு ரூபாவோ அல்லது நகைங்களோ போதுமானது கெடச்சதும் கிராமத்துக்கு வந்துடிவாங்க.

பொம்பளைங்க இதுக்கெல்லாம் பயப்படமாட்டாங்க. அவங்க எல்லாத்துக்கும் தயாரா இருப்பாங்க. அவங்களைக் கைது பண்றதுக்கு பலவாட்டி போலீஸ் வந்திருக்கு. நாங்க சேரிப் பொம்பளைங்க. அவங்க ஜெயில்ல இருந்து வர்றதப் பாக்க ரோட்டுக்கு போயிருக்கோம். அவங்களுக்காக நாங்க செல நேரம் வருத்தப்படுவேம். பாவம், அந்த பொம்பளைங்கள கைது பண்ணிக்கினு போகும்போது நாங்க அழுதிருக்கோம். அவமானம்தான் அது. "வெல்லக்கட்டி மாதிரி அழகா இருக்கீங்க, ஏன் இந்தத் தொழிலுக்கெல்லாம் போறீங்கன்னு" நாங்க கோட்டோம். ஆனா, கொஞ்சம்கூட வெட்கமோ, அவமானமோ, உணர்ச்சியோ இல்லாம, அந்த வண்டியில சௌகரியமா, ஒட்காந்துகினு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாங்க. . . . . . . . . . . . . (மேலும் வாசிக்க காண்க வல்லினம், மே-ஜூன் 2002, இதழ்-1)

(Viramma : Life of an Untouchable, Viramma, Josiane RAchine, Jean Luc Racine, Verso, London-1997; from English to Tamil- Maharandan)


வல்லினம் இதழ் ஒன்றில். . . .

நேர்காணல்:

1. "பெரியாரைச் சிந்தனையாளார் என்று சொல்ல முடியாது"
- ரவிக்குமார்


கட்டுரை:

1. தினமும் நடக்கும் தற்கொலைகள்
- பிரபஞ்சன்
2. கடந்த நூற்றாண்டில் ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்
- சு. வில்வரத்தினம்
3. திரைப்படத் தமிழ் - முனைவர் த. பரசுராமன்
4. 'நேற்றை' வளைத்துப் பிடிக்கும் நிகழ்காலங்கள் - க. பஞ்சாங்கம்

கவிதை :

மு. பொன்னம்பலம், தய்.கந்தசாமி, புதுவை இளவேனில்,
மகரந்தன், சடகோபன்.


சிறுகதை :

பாமா

No comments: